ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

காவிப்போர்வை...







குருதிப்பார்க்க வேண்டுமென்று

குத்திப்பார்க்க ஒரு கூட்டம்;

தட்டிக்கேட்க நினைத்தாலும் எங்களை

கொட்டிவைக்கும் உலகம்!

அடிப்படைவாதி என

அடைமொழிக் கொடுக்கும் அவலம்;





காவிப்போர்வை அணிந்துக்கொண்டு

குருதிகளைத் தூவிச்செல்லும் மோசம்;

பக்கம் பக்கமாய் அலசினாலும்

பத்திரிகைத் தர்மத்தைக் காணோம்!





கூரிய வாளுக்கு குழந்தைகளும்

தொலைந்த தேசம்;

அழுது நியாயம் கேட்டாலும் உலகம்

தீவிரவாதியென்றேப் பேசும்!





பலியாய் நாங்கள் ஆனாலும்

பயங்கரவாதி என்றேக் கூறும்;

காத்திருக்கிறோம் நாங்கள்

காலம் என்றாவது மாறும்!





வித்திட்ட விடுதலைக்கு

விலை எங்கள் இன்னுயிர்;

காட்டித்தந்தக் கூட்டத்திற்கு

காவியத்தலைவன் என்றப் பெயர்!





எல்லாம் தெரிந்த உலகமோ

எதுவும் காணாமல் நிற்கும்;

எதிர்த்துக் குரல் கொடுத்தால்

எல்லாத் திசையிலும் ஒலிக்கும்

“இஸ்லாமியத் தீவிரவாதி”

0 comments:

கருத்துரையிடுக