ஏன் தினமும் சாப்பாட்ட பார்சல்ல வாங்கிட்டுப் போறிங்க? ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்ன்னு டாக்டர் சொன்னார். அதான்!
டாக்டர், நீங்க சொந்தமா வீடு கட்டிக்கிட்டு இருந்திங்களே, முடிஞ்சதா?"
"இன்னும் இல்லை, அதை ஏன் நீங்க கேட்கிறீங்க?"
"எப்ப நான் டிஸ்சார்ஜ் ஆவேன்னு தெரிஞ்சுக்கத்தான்!"
--------------------------------
"ஹலோ.. இன்ஸ்பெக்டர் சார்! 10ம் நம்பர் வீட்ல விபசாரம் நடக்குது. உடனே வாங்க சார்!"
"ச்சீ.. நான் அந்த மாதிரி ஆளு இல்ல! போன வைடா ராஸ்கல்!"
------------------------------
போலிஸ்: ஏன் இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற?
திருடன்: சங்கிலி பறிக்கிறப்ப ஆளுங்க பார்த்துட்டாங்க, எல்லாரும் துரத்திக்கிட்டு வர்றாங்க.
நல்லவேளை.. உங்களை பார்த்தப்புறம்தான் நிம்மதியாயிருக்கு!
--------------------------------
போலிஸ்: உங்களை கைது செய்யப் போகிறோம்.. வாங்க ஆஸ்பத்திரிக்கு.
அரசியல்வாதி: எதுக்கு ஆஸ்பத்திரிக்கு?
போலிஸ்: எப்படி இருந்தாலும் ஸ்டேஷனுக்கு உள்ளே போனவுடன் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்குதானே போகப் போறீங்க.
--------------------------------
"அந்த பைனான்ஸ் கம்பெனிய சுத்தி ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்கோம்.. பார்த்திங்களா?"
"ஆமா, எதுக்கு?"
"ஓடும்போது சுலபமாய் பிடிப்பதற்குத்தான்!"
--------------------------------
செய்தி : அகல இரயில்பாதை அமைத்ததில் ஆளும்கட்சி ஊழல்.
தொண்டர்: தலைவரே அகலப்பாதை அமைக்கிறதுல ஊழல் செஞ்சதா எதிர்கட்சிக்காரங்க வழக்கு போட்டிருக்காங்க!
தலைவர்: வழக்குலருந்து தப்பிக்க ஏதாவது ‘குறுக்குப் பாதை’ இருக்கான்னு கண்டுபிடிங்கப்பா!
--------------------------------
போலிஸ்: எதுக்குடா பிள்ளையார் சிலைய திருடினே?
திருடன்: தொழில முதல்முறையா ஆரம்பிக்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கணும் இல்லையா? அதான் சார்!
--------------------------------
ஏன் தினமும் சாப்பாட்ட பார்சல்ல வாங்கிட்டுப் போறிங்க?
ஹோட்டல்ல சாப்பிட்டா அல்சர் வரும்ன்னு டாக்டர் சொன்னார். அதான்!
--------------------------------
“ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்… காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்… ஆனா?”
“என்ன ஆனா…?”
“பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?”
“ஆவ்வ்வ்வ்!!”
--------------------------------
ஒருவர் : உங்க பையன் என்ன பண்றான்?
நம்மவர் : அவன் போலீஸ் பாதுகாப்போட இருக்கான்.
ஒருவர் : அப்படியா! எங்க இருக்கான்?
நம்மவர் : வேலூர் ஜெயில்ல!
--------------------------------
அவரு ஒரு ஆச்சாரமான பிரம்மச்சாரி.
அப்படியா! அது சரி.. அவரு ஏன் எப்பொழுதும் கையில கட்டை வச்சிக்கிட்டு இருக்கார்.
ஏன்னா, அவரு கட்டைப் பிரம்மச்சாரியாம்! அதான்!
போலிஸ்: உங்க இருசக்கர வண்டிய காணோம்ன்னு புகார் குடுத்திருந்தீங்க.. இல்லையா? அதோ நிக்குதே.. அதுவா பாருங்க.
நம்மவர்: இல்லைங்க, இது இல்ல.
போலிஸ்: பரவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அப்புறம் உங்க மனைவிய காணோம்ன்னு இன்னொரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருந்தீங்க இல்லையா? அதோ அவங்களா பாருங்க?
நம்மவர்: இல்லை! பரவாயில்ல.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக